Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர் : திருப்பூரில் 2,757 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 11 ஊராட்சி தலைவர்களும், 489 வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மூலனூர் ஒன்றியம் கருப்பணன்வலசு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வார்டு கவுன்சிலர் பதவிக்கு இரண்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
ஆனால், அவர்கள் இரண்டு பேரும், தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்று கொண்டனர். இதனால், அங்கு தேர்தல் நடக்காது. 500 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், 2246 பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடக்க உள்ளது. 7044 பேர் களத்தில் உள்ளனர்.